செய்திகள்
எம்எஸ் டோனி

ஐபிஎல் போட்டி: சி.எஸ்.கே.வின் முதல் வீரராக டோனி தக்கவைப்பு

Published On 2021-10-17 08:06 GMT   |   Update On 2021-10-17 08:06 GMT
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் வீரராக டோனி தக்க வைக்கப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

புதுடெல்லி:

அடுத்த ஆண்டு நடைபெறும் 15-வது ஐ.பி.எல். போட்டியில் கூடுதலாக 2 அணிகள் பங்கேற்கின்றன. இதனால் மிகப்பெரிய அளவில் ஏலம் நடைபெறும். இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் வீரராக டோனி தக்க வைக்கப்பட்டுள்ளார். இதை சி.எஸ்.கே. அணி நிர்வாகம் இன்று தெரிவித்தது.

ஒவ்வொரு அணியும் 3 வீரர்கள் வரை தக்க வைத்துக்கொள்ளலாம். சி.எஸ்.கே.வில் தக்கவைக்கப்பட்டதன் மூலம் டோனி அடுத்த ஆண்டும் அந்த அணியில் விளையாடுவார். அவர் சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 4-வது ஐ.பி.எல். கோப்பையை பெற்றுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News