செய்திகள்
திண்டுக்கல்லில் கூட்டுறவு சங்க கிளர்க் மர்மமரணம்
திண்டுக்கல்லில் கூட்டுறவு சங்க கிளர்க் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:
விருதுநகர் மாவட்டம் திருப்பவனம் அருகில் உள்ள ஏ.முக்குலம் பகுதியை சேர்ந்தவர் பூமிநாதன் (52). இவர் திண்டுக்கல் பாண்டியன் நகரில் செயல்பட்டு வரும் அன்னைஅபிராமி மகளிர் தையல் கூட்டுறவு சங்கத்தின் கிளர்க்காக பணிபுரிந்து வந்தார்.
இவர் தனது மனைவி மற்றும் மகனுடன் முத்து நகரில் வசித்து வந்தார். விடுமுறை தினம் என்பதால் அவரது மனைவி மற்றும் மகன் ஊருக்கு சென்றுவிட்டனர்.
இன்று காலை நீண்ட நேரமாகியும் பூமிநாதன் கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு வரவில்லை. அவரது செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. இதனால் ஊழியர்கள் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது பூமிநாதன் தலை மற்றும் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்துகிடந்தார். இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பூமிநாதன் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எவ்வாறு இறந்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் திருப்பவனம் அருகில் உள்ள ஏ.முக்குலம் பகுதியை சேர்ந்தவர் பூமிநாதன் (52). இவர் திண்டுக்கல் பாண்டியன் நகரில் செயல்பட்டு வரும் அன்னைஅபிராமி மகளிர் தையல் கூட்டுறவு சங்கத்தின் கிளர்க்காக பணிபுரிந்து வந்தார்.
இவர் தனது மனைவி மற்றும் மகனுடன் முத்து நகரில் வசித்து வந்தார். விடுமுறை தினம் என்பதால் அவரது மனைவி மற்றும் மகன் ஊருக்கு சென்றுவிட்டனர்.
இன்று காலை நீண்ட நேரமாகியும் பூமிநாதன் கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு வரவில்லை. அவரது செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. இதனால் ஊழியர்கள் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது பூமிநாதன் தலை மற்றும் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்துகிடந்தார். இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பூமிநாதன் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எவ்வாறு இறந்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.