விளையாட்டு
இந்தியா- தென் ஆப்ரிக்கா டாஸ்

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: தென் ஆப்ரிக்கா பேட்டிங் செய்ய முடிவு

Published On 2022-01-19 08:40 GMT   |   Update On 2022-01-19 08:40 GMT
வெங்கடேஷ் ஐயர் அறிமுக வீரராக இன்றைய போட்டியில் களமிறங்கவுள்ளார்.
பார்ல்:

இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

காயம் காரணமாக ரோகித் சர்மா இடம்பெறாததால் அவருக்கு பதில் கே.எல்.ராகுல் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பும்ரா துணை கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.

இன்றைய அணியில் கே.எல் ராகுல், தவான், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ரவிசந்திரன் அஸ்வின், ஷர்துல் தாகூர், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, சஹால் ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

வெங்கடேஷ் ஐயர் அறிமுக வீரராக இன்றைய போட்டியில் களமிறங்கவுள்ளார்.
Tags:    

Similar News