ஆன்மிகம்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் கோவில்

ஆடிப்பூரம்: மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி அம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை

Published On 2021-08-09 08:28 GMT   |   Update On 2021-08-09 08:28 GMT
கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் நலன் கருதி நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் 11-ந்தேதி (புதன்கிழமை) பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் ஆடிப்பூர விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இதனால் கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் நலன் கருதி நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் 11-ந்தேதி (புதன்கிழமை) பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News