செய்திகள்

சங்கரன்கோவில் அருகே விஷம் குடித்து தொழிலாளி பலி

Published On 2019-05-11 12:21 GMT   |   Update On 2019-05-11 12:21 GMT
சங்கரன்கோவில் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை:

சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்த நல்லூரை அடுத்த லட்சுமியா புரத்தை சேர்ந்தவர் பெரிய முருகன் (வயது40), தொழிலாளி. இவர் நேற்று விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடினார். அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித் தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு பெரிய முருகன் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கரிவலம் வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
Tags:    

Similar News