உள்ளூர் செய்திகள்
கடையில் 2 வாலிபர்கள் செல்போன் திருடும் சிசிடிவி காட்சி.

பார்வையற்ற கடை உரிமையாளரை ஏமாற்றி செல்போன்களை திருடி சென்ற 2 வாலிபர்கள்

Published On 2022-04-17 07:47 GMT   |   Update On 2022-04-17 07:47 GMT
வேளாங்கண்ணியில் பார்வை தெரியாத கடை உரிமையாளரை ஏமாற்றி செல்போன் திருடிய 2 வாலிபர்களை சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி முச்சந்தி பகுதியில் பூவைத்தேடியை சேர்ந்த ஐயப்பன் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். பார்வை சரியாக தெரியாத ஐயப்பன் பெண் பணியாளர் ஒருவரை வேலைக்கு வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் ஐயப்பன் கண் பார்வை இழந்தவர் என்பதை நன்கு தெரிந்திருந்த 2 வாலிபர்கள் கடையில் புகுந்து செல்போன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டனர். செல்போன் வாங்குவது போல கடைக்குள் புகுந்த அவர்கள் பொருட்களின் விலையை கேட்டு ஐயப்பனின் கவனத்தை திசை திருப்பி செல்போன்களை திருடி உள்ளனர்.
 
கடையில் வேலை பார்க்கும் பெண் ஊழியர் கீழே குனிந்தபடி எழுதி கொண்டிருக்க, 2 வாலிபர்களும் செல்-போன்களை திருடி சென்றுள்ளனர்.

இந்த காட்சிகள் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியையும், பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் வேளாங்கண்ணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News