செய்திகள்
காவல்துறை விசாரணை

பீகாரில் தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் 8 வெடிகுண்டுகள் பறிமுதல்

Published On 2021-11-21 13:20 GMT   |   Update On 2021-11-21 13:20 GMT
பஞ்சாயத்து தேர்தலை முன்னிட்டு வைஷாலி மாவட்டத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
வைஷாலி:

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் பஞ்சாயத்து தேர்தல் இன்னும் 4 நாட்களில் நடைபெற உள்ள நிலையில், இன்று ஒரு கிராமத்தில் 8 வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றினர். மனார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜவாஜ் கிராமத்தில் பறிமுதல் செய்யப்பட்ட இந்த வெடிகுண்டுகள் அனைத்தும் உடனடியாக செயலிழக்கச் செய்யப்பட்டன.

இதுபற்றி சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ் குமார் கூறுகையில், “வெடிகுண்டுகள் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வெடிகுண்டுகளை உடனடியாக செயலிழக்கச் செய்தனர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெறுகிறது. வரும் பஞ்சாயத்து தேர்தலை முன்னிட்டு அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து குண்டுகளும் பிளாஸ்டிக் பையில் வைக்கப்பட்டிருந்தன.” என்றார்.
Tags:    

Similar News