செய்திகள்
கைது

கஞ்சா விற்ற 3 பேர் கைது

Published On 2021-09-14 05:23 GMT   |   Update On 2021-09-14 05:23 GMT
பணகுடி பகுதியில் கஞ்சா விற்ற 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து கஞ்சாவை கைப்பற்றினர்.
பணகுடி:

பணகுடி, பழவூர் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவுப்படி தனிப்படை போலீசார் காவல்கிணறு பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது சந்தேகப்படும்படியாக வந்த 3 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினா்.

விசாரணையில், பணகுடி சிவகாமிபுரம் ராமையா (வயது 36), மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த திருப்பதி (40), குமார் (40) ஆகியோர் என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.30,000 மற்றும் 1,500 கிராம் கஞ்சாவையும் கைப்பற்றினர்.
Tags:    

Similar News