ஆன்மிகம்
கும்பகோணம் தான்தோன்றீஸ்வரர் கோவில்

கும்பகோணம் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேகம்

Published On 2021-10-28 07:34 GMT   |   Update On 2021-10-28 07:34 GMT
அன்னபூரணி அம்பாள் உடனாகிய தான்தோன்றீஸ்வரர் கோவிலில் அன்னபூரணி அம்பாள், தான்தோன்றீஸ்வரர், விநாயகர் மற்றும் முருகன் சன்னதிகளில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
கும்பகோணம் அருகே உள்ள அசூர் கிராமத்தில் அன்னபூரணி அம்பாள் உடனாகிய தான்தோன்றீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருப்பணிகள் முடிந்து கடந்த மாதம் (செப்டம்பர்) 9-ந் தேதி குடமுழுக்கு நடந்தது.

இதனைத் தொடர்ந்து மண்டலாபிஷேக சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. மண்டலாபிஷேக விழாவின் கடைசி நாளான நேற்று கோவிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது.

இதையொட்டி அன்னபூரணி அம்பாள், தான்தோன்றீஸ்வரர், விநாயகர் மற்றும் முருகன் சன்னதிகளில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News