செய்திகள்
மஞ்சுநாத் பிரசாத்

பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத்துக்கு கொரோனா

Published On 2020-12-23 02:20 GMT   |   Update On 2020-12-23 02:20 GMT
பெங்களூரு மாநகராட்சி கமிஷனராக பணியாற்றி வரும் மஞ்சுநாத் பிரசாத்துக்கு வைரஸ் தொற்று பரவியிருப்பது தெரியவந்ததுள்ளது.
பெங்களூரு :

பெங்களூரு மாநகராட்சி கமிஷனராக பணியாற்றி வருபவர் மஞ்சுநாத் பிரசாத். இவர் பெங்களூருவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தார். அவர், நகரின் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்வது, மாநகராட்சி மருத்துவமனைகளில் ஆய்வு செய்து அங்குள்ள குறைகளை கேட்டறிவது போன்ற பணிகளை மேற்கொண்டு வந்தார்.

இந்த நிலையில் அவருக்கு கொரோனோ அறிகுறி இருந்தது. இதையடுத்து அவர் தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டார். இதில் அவருக்கு வைரஸ் தொற்று பரவியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர், கடந்த ஒரு வாரமாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
Tags:    

Similar News