செய்திகள்
பேஸ்புக்கில் பழகிய இளம்பெண்ணுக்கு கணவர், குழந்தைகள் இருப்பதை நேரில் பார்த்த வாலிபர் தற்கொலை
பேஸ்புக்கில் தொடர்பு கொண்ட இளம்பெண்ணுக்கு கணவர், குழந்தைகள் இருப்பதை நேரில் பார்த்த வாலிபர் அதிர்ச்சியில் தற்கொலை செய்து கொண்டார்.
செங்கம்:
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள புதுப்பாளையத்தில் கீழ்பாலூர் பகுதியை சேர்ந்த 25 வயது பெண் கணவர், குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
இந்தப் பெண்ணுக்கும் சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூர் பகுதியைச் சேர்ந்த பூபதி (24) என்ற வாலிபருக்கும் பேஸ்புக் மூலம் அறிமுகம் ஏற்பட்டது.
அந்த நட்பால் பெண்ணுடன் பூபதிக்கு காதல் ஏற்பட்டது. அந்தப் பெண்ணும் தனக்கு ஏற்கனவே திருமணமானதை மறைத்து பூபதியுடன் பழகி வந்துள்ளார்.
இதை தொடர்ந்து நேற்று பூபதி அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அந்த பெண்ணிற்கு ஏற்கனவே திருமணமாகி கணவர் குழந்தைகள் இருப்பதை பார்த்ததால் பூபதி அதிர்ச்சியடைந்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட பூபதி அந்த பெண்ணின் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுப்பாளையம் போலீசார் விரைந்து வந்து பூபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து பூபதியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் புதுப்பாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள புதுப்பாளையத்தில் கீழ்பாலூர் பகுதியை சேர்ந்த 25 வயது பெண் கணவர், குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
இந்தப் பெண்ணுக்கும் சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூர் பகுதியைச் சேர்ந்த பூபதி (24) என்ற வாலிபருக்கும் பேஸ்புக் மூலம் அறிமுகம் ஏற்பட்டது.
அந்த நட்பால் பெண்ணுடன் பூபதிக்கு காதல் ஏற்பட்டது. அந்தப் பெண்ணும் தனக்கு ஏற்கனவே திருமணமானதை மறைத்து பூபதியுடன் பழகி வந்துள்ளார்.
இதை தொடர்ந்து நேற்று பூபதி அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அந்த பெண்ணிற்கு ஏற்கனவே திருமணமாகி கணவர் குழந்தைகள் இருப்பதை பார்த்ததால் பூபதி அதிர்ச்சியடைந்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட பூபதி அந்த பெண்ணின் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுப்பாளையம் போலீசார் விரைந்து வந்து பூபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து பூபதியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் புதுப்பாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.