செய்திகள்
தற்கொலை

தென்காசி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் தற்கொலை

Published On 2020-10-29 12:14 GMT   |   Update On 2020-10-29 12:14 GMT
தென்காசி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பனவடலிசத்திரம்:

தென்காசி மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள தடியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆவுடையப்பன் என்ற தவசி (வயது 25). இவருக்கு முருகலட்சுமி (22) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆவுடையப்பன் இறந்து விட்டார். இதனால் முருகலட்சுமி தனது தாயார் வீட்டில் தனது இரண்டு குழந்தைகளையும் வைத்து பராமரித்து வந்தார். தனது கணவன் இறந்த துக்கம் தாங்காமல் கடந்த சில மாதங்களாக முருகலட்சுமி இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சுரண்டை அருகே உள்ள கடையாலுருட்டி தளவாய் மாடசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் சந்திரன் மகன் விஜயசாமி (வயது 25) பதனீர் வியாபாரி. இவர் கடந்த சில நாட்களாக வியாபாரத்திற்கு செல்லவில்லை. இதுகுறித்து அவரது குடும்பத்தினர் அவருக்கு அறிவுரை கூறியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட விஜயசாமி நேற்று அதிகாலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சேர்ந்தமரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விஜயசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிவகிரி குமாரபுரம் கோவில் சாலையில் வசித்தவர் கருப்பையா (75). இவருக்கு ஆஸ்துமா நோய் இருந்துள்ளது. இதற்காக கருப்பையா மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளார். இருப்பினும் நோய் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த கருப்பையா பூச்சி கொல்லி மருந்தை குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், கருப்பையா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News