செய்திகள்
துடியலூர் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது
துடியலூர் அருகே கஞ்சா விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
துடியலூர்:
கவுண்டம்பாளையம் புளியமர பஸ்நிறுத்தம் அருகே கஞ்சா விற்ற 2 பேரை துடியலூர்போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் ஆர்.எஸ்.நகரை சேர்ந்த அரவிந்த் (வயது 21), மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த ஜானகிராமன் (24) என்பது தெரியவந்தது. 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.