செய்திகள்

திருத்தணி அருகே கார் உதிரிபாகம் தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்து

Published On 2018-11-09 08:19 GMT   |   Update On 2018-11-09 08:19 GMT
திருத்தணி அருகே கார் உதிரிபாகம் தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருத்தணி:

திருத்தணியை அடுத்த கனகம்மாசத்திரம் அருகே தனியார் கார் உதிர் பாகங்கள் தயாரிக்கும் கம்பெனி உள்ளது.

இந்த கம்பெனியில் திருத்தணி, ஆர்.கே. பேட்டை அரக்கோணம் சோளிங்கர், திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து 1500 பேர் இரண்டு ஷிப்டுகளில் பணியாற்றி வருகின்றனர்.

முதல் ஷிப்ட் 8 மணி முதல் ஐந்து மணிவரை. இரண்டாவது ஷிப்ட் 5 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை என 2 ஷிப்டுகளில் 1500 பேர் பணியாற்றி வருகின்றனர்.

இதில் காரின் உதிரிபாகங்களான ஸ்டேரிங், இண்டிகேட்டர், ஸ்விட்ச் கியர் உள்ளிட்ட ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிக்கப்படுகிறது.

நேற்று இரவு வழக்கம் போல் பணியாற்றிவிட்டு தொழிலாளர்கள் இரவு 2 மணிக்கு மேல் சுமார் 30 தொழிலாளர்கள் மட்டுமே பணியில் இருந்ததாக கூறப்படுகிறது.

இரவு சுமார் 2 மணி அளவில் எதிர்பாராதவிதமாக ஸ்பார்க் ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது மளமளவென தீ நாலாபுறமும் பற்றி எரிந்தது. இதுகுறித்து கனகம்மாசத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சப்இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில் போலீசார் அங்கு சென்றனர்.

திருத்தணி மற்றும் திருவள்ளூர் அரக்கோணம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகி விட்டதாக கூறப்படுகிறது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

Similar News