செய்திகள்
கைது

காரைக்காலில் இருந்து மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில் கடத்தல்- 2 பேர் கைது

Published On 2021-06-10 12:33 GMT   |   Update On 2021-06-10 12:33 GMT
கும்பகோணம் அருகே உள்ள செ.புதூர் கடைவீதியில் திருநீலக்குடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

திருவிடைமருதூர்:

கும்பகோணம் அருகே உள்ள செ.புதூர் கடைவீதியில் திருநீலக்குடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை நிறுத்தி விசாரணை செய்தபோது, மேலையூர் பகுதியை சேர்ந்த தினேஷ், ராஜா என்பதும் காரைக்காலில் இருந்து 19 மதுபாட்டில்கள் கடத்தி வந்ததும் தெரியவந்தது. 

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 19 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News