செய்திகள்
வனவிலங்கு பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்த காட்சி

மயிலாடுதுறையில் வனவிலங்கு பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்

Published On 2021-10-08 14:26 GMT   |   Update On 2021-10-08 14:26 GMT
மயிலாடுதுறையில் வனவிலங்கு பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை:

மயிலாடுதுறையில் வனவிலங்கு பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் தலைமை தாங்கி ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் சின்னக்கடை வீதி, கண்ணாரத்தெரு, காமராஜர் சாலை, பூக்கடை தெரு வழியாக ெரயிலடி காவேரி நகரை சென்றடைந்தது.

ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் வன பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கார்த்திக், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஷாஜகான், ஜே.சி.ஐ. தன்னார்வ அமைப்பின் நிர்வாகிகள். திட்ட ஒருங்கிணைப்பாளர் கோவி.அசோகன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News