செய்திகள்
கைது

ஓட்டலில் மது விற்றவர் உள்பட 3 பேர் கைது

Published On 2021-10-10 08:51 GMT   |   Update On 2021-10-10 08:51 GMT
ஓட்டலில் மது விற்றவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நொய்யல்:

தளவாபாளையத்தில் உள்ள ஒரு ஓட்டலில் சட்டவிரோதமாக மது விற்பதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு பல்வேறு புகார் வந்தது. இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையிலான போலீசார் அந்த ஓட்டலுக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது தளவாபாளையம் பஜனை மடத்தெருவை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 41) என்பவர் மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், விற்பனைக்கு வைத்திருந்த 5 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

குளித்தலை கோட்டமேடு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்ற சிவானந்தம் (53) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 7 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல குளித்தலை சுங்ககேட் அருகே மது விற்ற வடிவேல் (36) என்பவரும் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 8 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News