ஆன்மிகம்
பழனி முருகன் கோவிலில் மாசி மாத கார்த்திகை உற்சவ விழா

பழனி முருகன் கோவிலில் மாசி மாத கார்த்திகை உற்சவ விழா

Published On 2021-02-20 07:06 GMT   |   Update On 2021-02-20 07:06 GMT
பழனி முருகன் கோவிலில் மாசி மாத கார்த்திகை உற்சவ விழா நடந்தது. அனைத்து தரிசன வழிகளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
பழனி முருகன் கோவிலில் மாசி மாத கார்த்திகை உற்சவ விழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விஸ்வரூப தரிசனம், 4.30 மணிக்கு தனூர் மாத பூஜை, 5.30 மணிக்கு விளாபூஜையில் முருகனுக்கு சந்நியாசி அலங்காரம், காலை 8 மணிக்கு சிறுகாலசந்தி பூஜையில் வேடன் அலங்காரம் நடைபெற்றது.

அதன்பிறகு 9 மணிக்கு கால சந்திபூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரமும், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையில் வைதீகாள் அலங்காரமும் செய்யப்பட்டது. பின்னர் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் ராஜ அலங்காரமும், இரவு 9 மணிக்கு ராக்கால பூஜையில் மலர்களால் சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது.

மாசி மாத கார்த்திகை விழாவையொட்டி, அதிகாலை முதலே பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. இதனால் அனைத்து தரிசன வழிகளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மாலை 6.40 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளி உட்பிரகாரத்தில் வலம் வந்தார். அப்போது அவருக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு மேல் தங்கரதத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதையடுத்து தங்கரத புறப்பாடு நடந்தது. இதில் 70 பக்தர்கள் தலா ரூ.2 ஆயிரம் செலுத்தி பங்கேற்றனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News