செய்திகள்
மாட்டு வண்டியில் மணல் கடத்திய 2 பேர் கைது
மாட்டு வண்டியில் மணல் கடத்திய 2 பேரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாலாபேட்டை:
இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது மாட்டு வண்டியில் மணல் ஏற்றிக்கொண்டிருந்த பிச்சை, மனோகரன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும், மாட்டு வண்டியும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கிராம நிர்வாக அதிகாரி முரளிதரன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாலாபேட்டையை அடுத்த வேங்காம்பட்டி வழியாக பூங்காற்று வாரி செல்கிறது. இந்த வாரியிலிருந்து சட்டவிரோதமாக சிலர் மாட்டு வண்டியில் மணல் ஏற்றி கொண்டு இருப்பதாக கிராம நிர்வாக அதிகாரி மற்றும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
மேலும், மாட்டு வண்டியும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கிராம நிர்வாக அதிகாரி முரளிதரன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.