செய்திகள்
பெண்கள் முற்றுகை

பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை

Published On 2019-11-19 09:31 GMT   |   Update On 2019-11-19 09:31 GMT
பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்:

பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட ராமதண்டலம் மற்றும் சித்தம்பாக்கம் ஊராட்சி செயலாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமதண்டலம், சித்தம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புல்லரம்பாக்கம் போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.

Tags:    

Similar News