செய்திகள்
கொள்ளை

மதுரவாயலில் வீட்டு பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை

Published On 2019-11-23 08:30 GMT   |   Update On 2019-11-23 08:30 GMT
மதுரவாயலில் வீட்டு பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போரூர்:

மதுரவாயல் கங்கா நகர் காந்தி தெருவைச் சேர்ந்தவர் சித்ரா. இவர் கடந்த 19-ந் தேதி உறவினர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் வெளியூர் சென்றார். நேற்று மாலை வீடு திரும்பியபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது.

உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 20 பவுன் நகை ரூ. 5 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

Tags:    

Similar News