தொழில்நுட்பம்
ரூ. 5 ஆயிரம் பட்ஜெட்டில் இந்தியாவில் அறிமுகமான புது ஸ்மார்ட்போன்
ஐடெல் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ. 5499 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஐடெல் மொபைல்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஏ47 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் ஹெச்டி பிளஸ் புல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர், 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் 5 எம்பி ஏஐ டூயல் கேமரா, 5 எம்பி செல்பி கேமரா, பல்வேறு அம்சங்களை வழங்கும் கைரேகை சென்சார், கஸ்டமைஸ்டு ஷாட்கட் அம்சம், பேஸ் அன்லாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
ஐடெல் ஏ47 சிறப்பம்சங்கள்
- 5.5 இன்ச் ஹெச்டி பிளஸ் புல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
- 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
- 2 ஜிபி ரேம்
- 32 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 5 எம்பி ஏஐ டூயல் கேமரா
- 5 எம்பி செல்பி கேமரா
- டூயல் சிம் ஸ்லாட்
- கைரேகை சென்சார், பேஸ் அன்லாக்
- ஆண்ட்ராய்டு 9 கோ எடிஷன்
- 3020 எம்ஏஹெச் பேட்டரி
புதிய ஐடெல் ஏ47 ஸ்மார்ட்போன் காஸ்மிக் பர்பிள் மற்றும் ஐஸ் லேக் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 5499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை பிப்ரவரி 5 ஆம் தேதி துவங்குகிறது.