செய்திகள்
கம்பத்தில் பாம்பு கடித்து கேரள வாலிபர் பலி
கம்பத்தில் முந்திரி தோட்டத்திற்கு சென்ற கேரள வாலிபரை பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
கம்பம்:
கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் டோனிசாபு (வயது 25). இவர் கடந்த 16-ந்தேதி தன்னுடைய நண்பரான காட்டுராஜாவை பார்க்க கம்பத்துக்கு வந்தார். பின்னர் அவர்கள் மணிக்கட்டி ஆலமரம் பகுதியில் உள்ள காட்டுராஜாவுக்கு சொந்தமான முந்திரி தோட்டத்திற்கு சென்றனர். அங்கு டோனிசாபுவை பாம்பு கடித்தது.
இதையடுத்து அவர் கம்பம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின் தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்தநிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று டோனிசாபு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.