ஆன்மிகம்
ஸ்ரீரங்கம் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

ஸ்ரீரங்கம் கோவிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும் நாட்கள்

Published On 2020-01-06 08:53 GMT   |   Update On 2020-01-06 08:53 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை திறக்கப்பட்ட சொர்க்கவாசல், ராப்பந்து நாட்கள் நிகழ்ச்சியிலும் திறந்திருக்கும்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை திறக்கப்பட்ட சொர்க்கவாசல், ராப்பந்து நாட்கள் நிகழ்ச்சியிலும் திறந்திருக்கும். அதாவது நாளை (செவ்வாய்க்கிழமை), நாளை மறுநாள் (புதன்கிழமை) மற்றும் வருகிற 9, 10, 11 ஆகிய தேதிகளில் பகல் 1 முதல் இரவு 8 மணி வரையும் சொர்க்கவாசல் திறந்திருக்கும். வருகிற 12-ந் தேதி திருக்கைத்தல சேவை அன்று மாலை 4 முதல் இரவு 8.30 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும்.

வருகிற 13-ந் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி அன்று சொர்க்கவாசல் திறப்பு கிடையாது. வருகிற 14-ந் தேதி பகல் 1 முதல் இரவு 8 மணி வரையும், வருகிற 15-ந் தேதி காலை 10.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் சொர்க்கவாசல் திறந்திருக்கும். மேற்கண்ட நாட்களில் பக்தர்கள் சொர்க்கவாசலை கடந்துபக்தர்கள் தரிசனம் செய்யலாம்.
Tags:    

Similar News