செய்திகள்
எம்எஸ் டோனி

எம்.எஸ். டோனி டுவிட்டர் பக்கத்தின் புளூ டிக் நீக்கம்

Published On 2021-08-06 11:37 GMT   |   Update On 2021-08-06 17:36 GMT
எம்.எஸ்.டோனி தனது ஓய்வு முடிவைக்கூட தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்காமல், இன்ஸ்டாகிராமில் தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ். டோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவரை பற்றி ஏதாவது ஒரு செய்தி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு அவரது ஹேர் ஸ்டைல் இணையதளத்தில் வைரலாகி வந்தது. 

அந்த ஹேர் ஸ்டைலில் இருந்த போட்டாவை அவரது ரசிகர்கள் பேஸ்புக், வாட்ஸ் அப்பில் அதிகமாக ஷேர் செய்தனர். 

இந்நிலையில் தற்போது அவரை பற்றிய ஒரு செய்தி பெரிதும் வைரலாகி வருகிறது. எம்.எஸ்.டோனியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் புளூ டிக்கை நீக்கியது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 



நீண்ட நாட்களாக ட்வீட் செய்யப்படாததால் டோனியின் டுவிட்டர் பக்கத்திற்கான புளூ டிக் நீக்கப்பட்டது. புளூ டிக்கை நீக்கியது ஏன்? என அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆனது. பின்னர் சில மணி நேரங்களில் டோனியின் டுவிட்டர் பக்கத்திற்கு  புளூ டிக் வழங்கப்பட்டது.

ஜனவரி 8ம் தேதிக்கு பிறகு டோனி தனது டுவிட்டர் பக்கத்தில் எந்த பதிவும் போடவில்லை. தனது ஓய்வு முடிவைக்கூட டுவிட்டரில் தெரிவிக்காமல், இன்ஸ்டாகிராமில் தெரிவித்தார். டுவிட்டரில் டோனியை பலர் ட்ரோல் செய்ததால், டுவிட்டரில் இருந்து விலகியிருப்பதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News