செய்திகள்
கோப்புபடம்

மனைவி பிரிந்து சென்ற விரக்தி - அளவுக்கு அதிமாக மது குடித்த பேராசிரியர் பலி

Published On 2021-04-08 11:20 GMT   |   Update On 2021-04-08 11:20 GMT
கருமத்தம்பட்டியில் காதல் திருமணம் செய்த மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் பேராசிரியர் அளவுக்கு அதிகமாக மது குடித்து பலியானார்.


கோவை:

கோவை கருமத்தம்பட்டி ஜங்கன்வுட் பகுதியை சேர்ந்தவர் பகிர் முகமது (வயது 29). நீலாம்பூரில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியர். இவரும் அதே பகுதியில் உள்ள பள்ளி ஆசிரியை நேகா பார்க்கவி (36) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

திருமணமான சிறிது நாட்களிலேயே இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் நேகா பார்க்கவி கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் விரக்தியடைந்த பகிர் முகமது வீட்டிலேயே முடங்கி கிடந்தார்.

நேற்று வெகுநேரமாகியும் பகிர் முகமது வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து அவரது மனைவிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் போன் மூலம் பலமுறை கணவரை தொடர்பு கொண்டார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதனையடுத்து அவர் வீட்டுக்கு வந்து கதவை திறந்து பார்த்தபோது பகிர் முகமது மயங்கி கிடந்தார்.

அதிர்ச்சியடைந்த மனைவி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பகிர் முகமதுவை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பகிர் முகமது பரிதாபமாக இறந்தார். இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முதல்கட்ட விசாரணையில் மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் பகிர் முகமது அளவுக்கு அதிமாக மதுகுடித்துள்ளார். இதனால் அவர் இறந்திருக்கலாம் என்று தெரிகிறது. உறுதியான தகவல் பிரேத பரிசோதனை அறிக்கையில் தான் தெரியவரும். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

Tags:    

Similar News