செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள்

சோழவரம் அருகே குடோனில் பதுக்கிய ரூ.3 கோடி செம்மரக்கட்டை பறிமுதல்

Published On 2019-07-30 07:22 GMT   |   Update On 2019-07-30 07:22 GMT
செங்குன்றம் அடுத்த சோழவரம் அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.3 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
செங்குன்றம்:

செங்குன்றத்தை அடுத்த சோழவரம் கோட்டைமேடு அருகே தனியாருக்கு சொந்தமான குடோன் உள்ளது.

இந்த குடோனில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக சோழவரம் சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையில் போலீசார் அந்த குடோனை சுற்றி வளைத்து சோதனை செய்தனர். அப்போது அங்கு 3 டன் எடை கொண்ட ரூ.3 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

செம்மரக்கட்டைகள் பதுக்கியது யார்? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். செம்மரக்கட்டைகள் மற்றும் இங்கு நிறுத்தப்பட்டு இருந்த 2 லாரிகள், ஒரு கார் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் வனத்துறையினரிடம் அவற்றை ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News