செய்திகள்
தமிழகத்தில் முன்கூட்டியே சட்டமன்ற தேர்தல் நடத்த வாய்ப்பில்லை- சத்யபிரத சாகு
தமிழகத்தில் முன்கூட்டியே சட்டமன்ற தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
சென்னை:
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியிருப்பதாவது:
* தமிழகத்தில் முன்கூட்டியே சட்டமன்ற தேர்தல் நடத்த வாய்ப்பில்லை.
* கூடுதல் வாக்குச்சாவடி மையங்களை அடையாளம் காண வேண்டி உள்ளதால் முன்கூட்டியே தேர்தல் நடத்த வாய்ப்பில்லை.
* ஒரு வாக்குச்சாவடியில் ஆயிரம் வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும்.
* 67 ஆயிரமாக உள்ள வாக்குச்சாவடி எண்ணிக்கையை 95 ஆயிரமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
* வாக்குச்சாவடி அதிகரிக்கப்பட உள்ளதால் கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வர உள்ளன.
* மகாராஷ்டிரா, மத்திய பிரதேசத்தில் இருந்து தமிழகத்துக்கு கூடுதல் வாக்கு இயந்திரங்கள் கொண்டுவரப்பட உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியிருப்பதாவது:
* தமிழகத்தில் முன்கூட்டியே சட்டமன்ற தேர்தல் நடத்த வாய்ப்பில்லை.
* கூடுதல் வாக்குச்சாவடி மையங்களை அடையாளம் காண வேண்டி உள்ளதால் முன்கூட்டியே தேர்தல் நடத்த வாய்ப்பில்லை.
* ஒரு வாக்குச்சாவடியில் ஆயிரம் வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும்.
* 67 ஆயிரமாக உள்ள வாக்குச்சாவடி எண்ணிக்கையை 95 ஆயிரமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
* வாக்குச்சாவடி அதிகரிக்கப்பட உள்ளதால் கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வர உள்ளன.
* மகாராஷ்டிரா, மத்திய பிரதேசத்தில் இருந்து தமிழகத்துக்கு கூடுதல் வாக்கு இயந்திரங்கள் கொண்டுவரப்பட உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.