செய்திகள்
குஷ்பு

முதல்வராக பொறுப்பேற்கும் முக ஸ்டாலினுக்கு வாழ்த்து - குஷ்பு பேட்டி

Published On 2021-05-03 06:32 GMT   |   Update On 2021-05-03 06:32 GMT
தமிழகத்தில் தாமரை மலராது என்றார்கள் 4 இடங்களில் மலர்ந்து இருக்கிறது என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

சென்னை:

நடிகை குஷ்பு பா.ஜனதா சார்பில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். தேர்தல் முடிவு குறித்து அவர் கூறியதாவது:-

தேர்தலில் மக்கள் தீர்ப்புதான் மகேசன் தீர்ப்பு. மக்கள் ஒரு முடிவை எடுத்துள்ளார்கள். ஒரு நல்ல அரசியல்வாதியாக அதை மனப்பூர்வமாக ஏற்கிறேன்.

தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்றேன். ஆனால் என்றைக்கும் மலராது என்றார்கள். மலர்ந்து இருக்கிறது. 4 தொகுதிகளில் மலர்ந்து இருக்கிறது. சட்டசபையில் இடம் பெறபோகிறது.

அண்டை மாநிலமான புதுவையிலும் மலர்ந்து இருக்கிறது. இதுதான் ஆரம்பம். எதிர்காலத்தில் இங்கும் தாமரையின் ஆட்சி வரும்.


வெற்றி பெற்ற அணைவருக்கும் வாழ்த்துக்கள் முதல்-அமைச்சராக பொறுப்பேற்க போகும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்.

இவ்வாறு குஷ்பு கூறினார்.

Tags:    

Similar News