செய்திகள்
உடல்நல குறைவால் சிகிச்சை பெறும் சின்மயானந்

சின்மயானந்தை கைது செய்யாவிட்டால் தீக்குளிப்பேன் - கற்பழிப்பு புகார் கூறிய மாணவி மிரட்டல்

Published On 2019-09-18 22:44 GMT   |   Update On 2019-09-18 22:44 GMT
சின்மயானந்தை கைது செய்யாவிட்டால் தீக்குளிப்பேன் என சட்ட கல்லூரி மாணவி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷாஜகான்பூர்:

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் முன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜனதா தலைவருமான சுவாமி சின்மயானந்த் தன்னை கற்பழித்ததாக சட்டக்கல்லூரி மாணவி புகார் கூறினார். இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் அந்த மாணவி கூறும்போது, “மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் நான் வாக்குமூலம் கொடுத்து 2 நாட்கள் ஆகியும் இன்னும் சின்மயானந்தை கைது செய்யவில்லை. அரசு நான் சாக வேண்டும் என்று காத்திருக்கிறதா? சின்மயானந்தை உடனடியாக கைது செய்யவில்லை என்றால் நான் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்வேன்” என்றார்.

இதற்கிடையே சின்மயானந்துக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால், அவருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. சர்க்கரை அளவு ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. இதனால் சிகிச்சையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் குழு தெரிவித்தது.
Tags:    

Similar News