செய்திகள்
கைது

பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

Published On 2021-04-11 17:53 GMT   |   Update On 2021-04-11 17:53 GMT
பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2000 மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை:

கோவை சுகுணாபுரம் பகுதியில் உள்ள மலையடிவாரத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் அமிர்தலிங்கம், சீனிவாசன், கணேசன் தலைமையிலான போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2000 மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:    

Similar News