லைஃப்ஸ்டைல்
பாம்பே சட்னி

பத்தே நிமிடத்தில் செய்யலாம் பாம்பே சட்னி

Published On 2020-08-27 05:37 GMT   |   Update On 2020-08-27 05:37 GMT
பத்தே நிமிடத்தில் இந்த சட்னியை செய்யலாம். இந்த சட்னி ஆரோக்கியமானதும் கூட. இட்லி, தோசைக்கு, பூரிக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :

வெங்காயம் - 2
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 5 பற்கள்
கடலை மாவு - 1 டீஸ்பூன
வெல்லம் - 3/4 டீஸ்பூன
தண்ணீர் - 1 1/2 கப்
மஞ்சள் - 1/4 டீஸ்பூன
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன

தாளிக்க :

எண்ணெய் - 2 டீஸ்பூன
கடுகு - 1 டீஸ்பூன
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன
வெந்தையம் - 1/4 டீஸ்பூன
சீரகம் - 1 டீஸ்பூன
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
காய்ந்த மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு



செய்முறை :

கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

கடலை மாவை 1 -1/2 கப் தண்ணீரில் கட்டியாகாமல் கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.

அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வெந்தையம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் இஞ்சி , பூண்டு, வெங்காயம் சேர்த்து வதங்கியதும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

தக்காளி வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்துக்கொள்ளுங்கள்.

வதங்கியதும் கரைத்த கடலை மாவை ஊற்றி கலக்குங்கள். உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.

பின் நன்குக் கலக்கிவிட்டு சிறு தீயில் 4- 5 நிமிடங்களுக்குக் கொதிக்கவிட்டு இறுதியாக கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.

அவ்வளவுதான் கடலை மாவு சட்னி தயார்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News