செய்திகள்
கொள்ளை

பீளமேட்டில் ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வர் வீட்டில் திருட்டு

Published On 2021-06-30 10:12 GMT   |   Update On 2021-06-30 10:12 GMT
கோவை பீளமேட்டில் ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வர் வீட்டில் நடைபெற்ற திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை பீளமேடு அருகே உள்ள விளாங்குறிச்சி ரோட்டை சேர்ந்தவர் கண்ணன் (வயது 70). ஓய்வு பெற்ற தனியார் கல்லூரி முதல்வர். கடந்த 23-ந்தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் மதுரையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றார். 

அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் வெள்ளி தட்டு, குங்கும சிமிழ் ஆகியவற்றை திருடி தப்பிச் சென்றனர். நேற்று வீட்டிற்கு திரும்பிய கண்ணன் வீட்டில் திருட்டு போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். 

பின்னர் இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News