செய்திகள்
இஷாந்த் சர்மா

ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகளை பெற்றார் இஷாந்த் சர்மா

Published On 2019-11-24 09:51 GMT   |   Update On 2019-11-24 09:51 GMT
வங்காளதேச அணிக்கெதிராக அபாரமாக பந்து வீசிய இஷாந்த் சர்மா ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை தட்டிச் சென்றார்.
இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. முதல் டெஸ்ட் இந்தூரிலும், 2-வது டெஸ்ட் கொல்கத்தாவில் பகல்-இரவு டெஸ்ட் போட்டியாகவும் நடைபெற்றது.

இரண்டு டெஸ்டிலும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களான இஷாந்த் சர்மா, முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் அபாரமான பந்து வீசினர்.

குறிப்பாக 2-வது டெஸ்டில் இஷாந்த் சர்மாவின் பந்த வீச்சில் அனல் பறந்தது. முதல் இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தினார். 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் வீழ்த்தினார். முதல் டெஸ்டில் மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார்.

கொல்கத்தா டெஸ்டில் 9 விக்கெட்டக்கள் வீழ்த்தியதால்  ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இரண்டு டெஸ்டிலும் சேர்த்து 12 விக்கெட் வீழ்த்தியதால் தொடரை நாயகன் விருது வழங்கப்பட்டது. 
Tags:    

Similar News