செய்திகள்
தற்கொலை

பணகுடி அருகே வெளிநாடு போக முடியாததால் என்ஜினீயர் தற்கொலை

Published On 2021-09-08 09:44 GMT   |   Update On 2021-09-08 09:44 GMT
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே வெளிநாடு போக முடியாததால் மனவேதனை அடைந்த என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
நெல்லை:

பணகுடி அருகே உள்ள பழவூரை அடுத்த ஈத்தங்காடு கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் கார்த்திக் (வயது26). இவர் டிப்ளமோ என்ஜினீயர் படித்து விட்டு கூலி வேலை செய்து வந்தார். எப்படியாவது வெளிநாட்டு வேலைக்கு போக வேண்டும் என்று முயற்சி எடுத்து வந்தார். ஆனால் அவரால் வெளிநாட்டுக்கு செல்ல முடியவில்லை.

இதில் மனமுடைந்த கார்த்திக், நேற்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News