உள்ளூர் செய்திகள்
பத்மநாபபுரம் மேற்குவாசல் பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகள் சுகாதாரசீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார்
பத்மநாபபுரம் மேற்குவாசல் பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகள் சுகாதாரசீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார்
தக்கலை, ஏப்.16-
பதமனாபபுரம் நகராட் சிக்குட்பட்ட பகுதியில் அமைந்து உள்ளது பத்மனா புரம் அரண்மனை. இந்த அரண்மனையை பார்க்க உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நூற்று கணக்கான பேர் வந்து செல்கின்றனர். கொரோனா தொற்று தற்போது குறைந்த பின்பு அதிக அளவில் மக்கள் வந்து செல்கின்றனர்.
கடந்த சில நாள்களாக அரண்மனையின் மேற்கு வாசல் பகுதியில் குப்பை களை அகற்றாமல் குப்பை மேடாக காட்சி அளிக்கிறது தற்போது. 2 நாள்களாக பெய்துவரும் பலத்த மழையால் இப்பகுதி மிகவும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தற்போது நோய்தொற்று குறையும் இந்த காலகட்டத்தில் மீண்டும் நோய்தொற்று பரவி விடுமோ என பொது மக்கள் அச்சப்படுகின்றனர்.
மேலும் இந்த குப்பைகளை உடனடியாக அகற்ற வேண் டும் இல்லையெனில் நகராட்சி அலுவலகம் முன்பு குப்பை கொட்டும் போராட்டம் நடத்த போவதாக பத்மனாபபுரம் நகர காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது.