உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் மாயமான 3 பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பகுதியை சேர்ந்தவர், 16 வயது சிறுமி. இவர் 9 ம் வகுப்பு படித்து வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் 9 ம் வகுப்பு மாணவி படித்து வருகிறார். பேடரப்பள்ளி, பாரதி யார் நகர் பகுதியை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். தனியார் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து விட்டு பாதியில் படிப்பை நிறுத்தி விட்டார்.
இவர்கள் மூவரும் தோழிகள் ஆவார்கள். கடந்த, 11 ந் தேதி வீட்டை விட்டு வெளியில் சென்ற இவர்கள் மூவரும் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து சிப்காட் போலீ சார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.