செய்திகள்
கைது

பிரம்மதேசம் அருகே சாராயம் விற்ற வாலிபர் கைது

Published On 2021-07-24 10:19 GMT   |   Update On 2021-07-24 10:19 GMT
பிரம்மதேசம் அருகே சாராயம் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரம்மதேசம்:

பிரம்மதேசம் அருகே உள்ள வட கொளப்பாக்கம் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 30). இவர் அந்த பகுதியில் உள்ள ஒருவரது விவசாய நிலத்தில் 179 லிட்டர் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தார். இதுபற்றி அறிந்த பிரம்மதேசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனி பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று, ஆனந்தனை கைது செய்து, சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News