செய்திகள்
சேத்துப்பட்டில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
சேத்துப்பட்டு நான்கு வழி சாலையில் பேரூராட்சி ஊழியர்கள் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டிருந்தனர்.
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு நான்கு வழி சாலையில் பேரூராட்சி ஊழியர்கள் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டிருந்தனர். அப்போது முககவசம் அணியாமல் வந்தவர்களிடம் ரூ.2,200 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.
மேலும் பொதுமக்கள் சந்திக்கக் கூடிய இடங்களில் ஒலிபெருக்கி மூலம் வீட்டிலிருந்து வரும்போது முககவசம் அணிந்து வரவேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இதில் பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.