செய்திகள்
திருக்கல்யாண கோலத்தில் சோழீஸ்வரர் - தெய்வநாயகி அம்மன்.

வெள்ளகோவில் சோழீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி

Published On 2021-11-29 09:49 GMT   |   Update On 2021-11-29 09:49 GMT
அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
வெள்ளகோவில்:

வெள்ளகோவில் சோழீஸ்வரர் கோவிலில் சோழீஸ்வரர், தெய்வநாயகி அம்மன், முருகன், விநாயகர், 63 நாயன்மார்கள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார அபிஷேகங்கள் நடைபெற்றன. சுந்தரர் தேவாரம் முற்றோதல் செய்யப்பட்டது. 

இதையடுத்து யாக பூஜையுடன் தொடங்கி மாகாளி அம்மன் கோவிலில் இருந்து பெண் வீட்டு சீர்தட்டு கொண்டுவரப்பட்டு சோழீஸ்வரர் -தெய்வநாயகி அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கோயம்புத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சிவனடியார்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News