உள்ளூர் செய்திகள்
ஆரணியில் விஷம் குடித்து பெண் தற்கொலை
ஆரணியில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்துகொண்டார்.
ஆரணி:
ஆரணி டவுன் சைதாப்பேட்டை வீரபத்திரர் தெருவை சேர்ந்தவர் நாகராஜ். கட்டிட மேஸ்திரி.
இவருக்கு சங்கீதா என்ற மனைவியும் சந்துரு, ராஜேஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சங்கீதா பல நாட்களாக உடல் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார்.
இதனால் மனமுடைந்த சங்கீதா நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனைகண்ட அக்கம்பக்கத்தினர் சங்கீதாவை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கீதா பரிதாபமாக இறந்தார்.
இச்சம்பவம் குறித்து ஆரணி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.