செய்திகள்
சென்னை மாநகராட்சி

2 முறை விதிகளை மீறினால் கடைகளுக்கு சீல் வைப்பு

Published On 2021-04-09 07:46 GMT   |   Update On 2021-04-09 07:46 GMT
கொரோனா நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் நிறுவனம், கடை, அலுவலகம் உரிமையாளர்களிடம் இருந்து அதற்கான அபராத தொகை வசூலிக்கப்படும்.
சென்னை:

சென்னை மாநகராட்சி அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் நிறுவனம், கடை, அலுவலகம் உரிமையாளர்களிடம் இருந்து அதற்கான அபராத தொகை வசூலிக்கப்படும்.

2 முறைக்கு மேல் அவர்கள் விதிகளை மீறினால் நிறுவனம், கடை, அலுவலகங்கள் “சீல்” வைக்கப்படும்.

எனவே நோய் பரவலை கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் பாதுகாப்பை மேம்படுத்தவும் தனி நபர், கடைகள், வணிக நிறுவன உரிமையாளர்கள் அரசின் வழிகாட்டுதலுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News