செய்திகள்
கைது

புன்னம்சத்திரம், குளித்தலையில் மது விற்ற 2 பேர் கைது

Published On 2021-10-17 13:09 GMT   |   Update On 2021-10-17 13:09 GMT
புன்னம்சத்திரம், குளித்தலையில் மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நொய்யல்:

புன்னம்சத்திரம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு பல்வேறு புகார் வந்தது. இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது புன்னம்சத்திரம் அரசு மதுபான கடைக்கு பின்புறம் ஒருவர் மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து, புதுக்கோட்டை மாவட்டம் மோகனூர் அருகே பெரியார் கோட்டை பகுதியை சேர்ந்த பால்ராஜ் (வயது 34) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 6 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

குளித்தலை அருகே உள்ள ஈச்சம்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் மது விற்ற கிழாரிப்பட்டி பகுதியை சேர்ந்த வடிவேல் (35) என்பவரை குளித்தலை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 7 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:    

Similar News