செய்திகள்

லாரிகளுக்கு இடையில் சிக்கி நசுங்கிய வேன்- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி

Published On 2019-05-11 10:26 GMT   |   Update On 2019-05-11 10:26 GMT
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் அருகே இரண்டு லாரிகளுக்கு இடையே வேன் சிக்கி நசுங்கியதில், 7 பேர் உயிரிழந்தனர்.
குவாலியர்:

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டம் தாப்ரா நகரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் நேற்று இரவு மெகந்திபூர் பாலாஜி கோவிலுக்கு வேனில் சென்றனர். ஆக்ரா-ஜான்சி சாலையில்  குவாலியர் அருகே உள்ள சுங்கச்சாவடியை அடைந்தபோது,  ஒரு லாரியின் பின்னால் வேன் நின்றுகொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த மற்றொரு லாரி, வேன் மீது மோதியது.

இதனால் இரண்டு லாரிகளுக்கு நடுவில் சிக்கிய வேன் நசுங்கியது. இதில், வேனுக்குள் இருந்த 2 சிறுமிகள் உள்ளிட்ட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News