செய்திகள்
இளம்பெண் கடத்தல்

மதுரையில் இளம்பெண் கடத்தல் - போலீசில் தாய் புகார்

Published On 2019-11-13 10:15 GMT   |   Update On 2019-11-13 10:15 GMT
மதுரையில் இளம்பெண் கடத்தப்பட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:

மதுரை தெற்குவாசல் காஜா தெருவைச் சேர்ந்தவர் ஜபருல்லா. இவரது மகள் நபீலா (வயது 17). 9-ம் வகுப்பு வரை படித்த இவர், தற்போது ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று வேலைக்கு சென்ற நபீலா, மாலையில் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்கவில்லை.

இது குறித்து தெற்கு வாசல் போலீசில், நபீலாவின் தாயார் செய்யது அலி பாத்திமா புகார் கொடுத்தார். அதில், தினேஷ்குமார் என்ற வாலிபர் தனது மகளை கடத்திச் சென்றிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நபீலாவை தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்...

மாடக்குளத்தைச் சேர்ந்த பசுபதி மனைவி மலர்விழி (23). அவனியாபுரம் இமானுவேல் நகரில் உள்ள பெற்றோர் வீட்டிற்குச் சென்ற இவர், 15 பவுன் நகைகளுடன் மாயமாகி விட்டார்.

அந்தப்பகுதியில் வசித்த, காரியாபட்டி தோணுகாலைச் சேர்ந்த முத்து பாண்டியனுடன் மலர்விழிக்கு பழக்கம் இருந்ததாகவும், அவருடன் தான் சென்றிருக்கலாம் என்றும் போலீசில் புகார் செய்யப்பட்டது.

அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மலர்விழியை தேடி வருகின்றனர்.


Tags:    

Similar News