உள்ளூர் செய்திகள்
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி நாளை திறப்பு
அரசு மருத்துவக்கல்லூரியை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக நாளை திறந்து வைக்கிறார்.
திருப்பூர்:
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகள் அனைத்தும் நிறைவடைந்து இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் அரசு மருத்துவக்கல்லூரியை நாளை 12-ந்தேதி (புதன்கிழமை) மாலை 4 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார்.
திருப்பூர அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இறுதி கட்ட தூய்மை பணிகள் மற்றும் அலங்கார மின் விளக்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.