உள்ளூர் செய்திகள்
குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா பாதுகாப்பு குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆய்வு செய்தார்.

குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா கேமரா மூலம் கண்காணிப்பு.

Published On 2022-05-06 10:29 GMT   |   Update On 2022-05-06 10:29 GMT
குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா கேமரா மூலம் கண்காணிக்கபடும் என போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் கூறினார்.
குடியாத்தம், 

வேலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய தேர் திருவிழாவான நெல்லூர்பேட்டை கருப்புலீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா வரும் 11-ந்தேதி நடைபெற உள்ளது.

எஸ்.பி. ஆய்வு இதனையொட்டி தேர் செல்லும் பாதையில் பாதுகாப்பு பணிகள் குறித்தும் தேர் செல்லும் பாதையிலும் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் காவல்துறை அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து கெங்கையம்மன் கோவில் தேர் திருவிழா வரும் 14-ந் தேதியும், கெங்கையம்மன் சிரசு திருவிழா ஊர்வலம் வரும் 15-ந்தேதியும் நடைபெற உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து குறித்தும் தேர் மற்றும் சிரசு செல்லும் பாதைகளில் காவல்துறை அதிகாரிகளுடன் சென்று போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் நேற்று இரவு ஆய்வு செய்தார். 

இந்த ஆய்வின்போது குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, டிராபிக் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சிலம்பரசன், மணிகண்டன், கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது
நெல்லூர்பேட்டை கருப்புலீஸ்வரர் தேர் திருவிழா மற்றும் கெங்கையம்மன் கோவில் தேர் திருவிழா, சிரசு திருவிழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து காவல்துறையினர் ஆய்வு செய்யப்பட்டது. 

திருவிழாவை காண வரும் வெளியூர் பக்தர்கள் வசதிக்காக வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்வது குறித்தும், நகரில் திருவிழாவின் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பக்தர்களும் பொதுமக்களும் கோவில்களுக்கு சென்று வர ஏற்பாடுகள் செய்வது குறித்தும், தேர் திருவிழாவின் போதும் சிரசு திருவிழாவின் போதும் அசம்பாவிதம் நடைபெறாத வண்ணம் முன்னேற்பாடுகள் குறித்தும் கோவில் மற்றும் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணிப்பது, குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்தும் அவர்களை முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக கைது செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

மேலும் திருவிழாவின்போது பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடைஞ்சல் ஏற்படுத்தும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
Tags:    

Similar News