உள்ளூர் செய்திகள்
.

மது என நினைத்து விஷத்தை குடித்த தொழிலாளி சாவு

Published On 2022-04-15 07:49 GMT   |   Update On 2022-04-15 07:49 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே மது என நினைத்து விஷத்தை குடித்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
கிருஷ்ணகிரி ,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே மருதேப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் முனியப்பா (வயது 52). கூலித் தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.

 கடந்த, 11 ந் தேதி வீட்டில் பாட்டிலில் இருந்த விஷத்தை, மது என நினைத்து குடித்து மயங்கினார். கிருஷ்ணகிரி அரசு மருத்து வமனையில் சேர்த்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். 

இது குறித்து கந்திகுப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News