செய்திகள்
மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு- தமிழக அரசு முடிவு

Published On 2020-01-10 06:14 GMT   |   Update On 2020-01-10 06:14 GMT
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது.
சென்னை:

சென்னை மாநகராட்சியில் நடைபெறும் பணிகளில் ஆற்று மணலுக்கு பதில் எம். சாண்டை பயன்படுத்தியதில் ரூ.1000 கோடி ஊழல் நடந்திருப்பதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி இருந்தார்.

இது தொடர்பாக கடந்த மாதம் அவர் வெளியிட்டு இருந்த அறிக்கையில், மாநகராட்சி பகுதிகளில் நடைபாதை அமைக்கும் திட்டங்கள், ஸ்மார்ட் சிட்டி மற்றும் உலக வங்கி உதவியுடன் நடைபெறும் ஒப்பந்த பணிகளில், ஆற்று மணலுக்கு பதில் எம்.சாண்டை பயன்படுத்தி இந்த முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி இருந்தார்.

ரூ.1000 கோடி ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது மு.க.ஸ்டாலின் புகார் கூறி இருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து அ.தி.மு.க. சார்பில் விளக்கமும் கொடுக்கப்பட்டது.


இந்த நிலையில் மு.க. ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. வழக்கு தொடர்வது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதையடுத்து சென்னை செசன்ஸ் கோர்ட்டில் மு.க.ஸ்டாலின் மீது விரைவில் அவதூறு வழக்கு தொடரப்பட உள்ளது.

499 சட்டப்பிரிவின் கீழ் ஒரு அவதூறு வழக்கு தொடர்ந்த பின்னர் கோர்ட்டில் இருந்து மு.க.ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.
Tags:    

Similar News