செய்திகள்
மரணம்

சீவலப்பேரி அருகே குளத்தில் மூழ்கி இளம்பெண் பலி

Published On 2021-11-20 11:16 GMT   |   Update On 2021-11-20 11:16 GMT
சீவலப்பேரி அருகே குளத்தில் மூழ்கிய இளம்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை:

பாளை அருகே உள்ள சீவலப்பேரியை அடுத்த குப்பை குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் மாரிதுரை.

இவரது மகள் ஹரிச்சந்திரா (வயது 19). இவரும், இவரது தாயார் சரஸ்வதியும் நேற்று மாலை அந்த பகுதியில் உள்ள குளத்தில் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று ஹரிச்சந்திரா ஆழமான பகுதியில் மூழ்கினார்.

உடனடியாக சரஸ்வதியும் மற்றவர்களும் கூச்சல் போட்டனர். அந்த பகுதியில் இருந்தவர்கள் ஓடிவந்து தண்ணீரில் மூழ்கி கிடந்த ஹரிச்சந்திராவை மீட்டனர். மயக்க நிலையில் இருந்த அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் ஹரிச்சந்திரா பரிதாபமாக இறந்தார். இது குறித்து சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News